டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி மாத்திரைகள் விற்க கூடாது – மருந்து கடை உரிமையாளர்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை.!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . துணை ஆணையர் ஸ்டாலின் தலைமை வகித்துபேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணை மாத்திரைகளை விற்க கூடாது. ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு அதிக வலி நிவாரண மாத்திரை வழங்க கூடாது. 2 சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். சந்தேகத்துக்குரிய பார்சல் வந்தால் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் 170 பேர் பங்கு கொண்டனர்..