காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் – போலி நிருபர் கைது.!!

கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் அம்மாசை கவுண்டர் விதியை சேர்ந்தவர் குமாரவேல். இவரது மகள் ரேஷ்மா (வயது 21) இவர் பி. காம் ( (சிஏ) படித்துவிட்டு டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவரின் நட்பு ஏற்பட்டது. பிறகு அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பேசுவதை ரேஷ்மா தவிர்த்தார். இந்த நிலையில் ரேஷ்மா நேற்று கோவைப்புதூர் – குளத்துப்பாளையம் சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த வாலிபர் அவரை வழிமறித்து தாக்கி தகாத வார்த்தைகளால் பேசி ஆச்சீடு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். பின்னர் அவரது போட்டோ வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவ விடுவதாகவும் மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ரேஷ்மா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து பொன்னையராஜ புரம் , சாமியார் புது வீதியைச் சேர்ந்த இம்மானுவேல் (வயது 26) என்பவரை நேற்று கைது செய்தார் . இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருவதாக கூறினாராம். அவர் எந்த தொலைக்காட்சியிலும் செய்தியாளராக வேலை பார்க்கவில்லை என்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.