மகன் திட்டியதால் மனமுடைந்த தாய் கிணற்றில் குதித்து தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பக்கம் உள்ள மோதிராபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,எலக்ட்ரிசியன்,இவரது மனைவி மணிமேகலை (வயது 36) இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிறது.சஞ்சீவ் குமார் ( வயது 16 )என்ற மகன் உள்ளான் இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தாயாரிடம் புதிதாக பைக் வாங்கி தருமாறு கூறினார். அதற்கு அவர் மறுத்தார் . இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் குமார் தனது தாயாரை திட்டினாராம். இதில் மனம் உடைந்த தாயார் மணிமேகலை அங்குள்ள திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கணவர் ரவிச்சந்திரன் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு படை உதவியுடன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.