கல்லுாரி மாணவிகளின் வீட்டுத் தோட்ட கலை செயல் விளக்கம்.!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் நடைப் பெற்றது.

இக்கூட்டத்தில் ஊரக தோட்டக்கலை பணி அனுப திட்டத்திற்காக தென்காசி மாவட்ட த்திற்கு வருகை புரிந்த விருதுநகர் மாவட்டம், கலசலிங்க கல்லூரி தோட்டக்கலை துறை மாணவிகள் பா.வேல் அரசி, பா.லக்ஸா ஹரிணி, ர.ரேணுகா தேவி, ஆ.அபிதாசினி, அ.நிஷா ஸ்ரீ, சி.வினோதா ஆகியோர்
வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து
மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி,
தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி  ஆகியோர் முன்னிலையில்
வீட்டுத்தோட்ட மாதிரி அமைத்து செயல் விளக்கம் அளித்தனர்..