இலங்கை சிறையில் உள்ள 12 ராமேஸ்வர மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் 14ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வர மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து ஆணையிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.