கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி மரணம்..

கோவை :நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்,மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன் என்ற வாத்து கோழி (வயது 70)இவர் ஒரு வழக்கு தொடர்பாகதண்டனை கைதியாக 9 – 3 – 2020 முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.