தர்மபுரி எம்.பி சர்ச்சை பேச்சு… கோவை காமாட்சிபுரி ஆதீனம் கண்டனம்..!

தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவன்- பார்வதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இது இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து கோவை காமாட்சி புரி ஆதீனம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். சுவாமிகள் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-மக்கள் பணியாற்றக்கூடிய ஒருவர் இப்படி மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.தமிழக முதலமைச்சர் அந்த எம்.பி.மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அமைதி காக்க வேண்டும்.என்று கூறியுள்ளார்.