ஆற்றில் குதித்து கட்டிட தொழிலாளி தற்கொலை..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 43 )கட்டிட தொழிலாளி .இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர் .சக்திவேல் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் கடந்த 6 ஆண்டுகள் முன்பு தனியாக சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்டைந்த சக்திவேல் நேற்று ஆனைமலை ஆழியாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை அழகப்பன் ஆனைமலை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.