கோவையில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை..!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சி,லட்சுமி கார்டன் 2-வது விதியை சேர்ந்தவர் பூசனம். இவரது மகள் காயத்ரி ( வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி ஏ படித்து வருகிறார் .இவர் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்தாராம். இதை அவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த காயத்திரி நேற்று அவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரம் அறையின் கதவை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை கட்டி தூக்கு போட்டு தொங்கினார். இதை பார்த்த பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வழியில் அவர் இறந்தார். இது குறித்து தாயார் கங்கா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.