வீடு புகுந்து தனியாக இருந்த இளம்பெண் மீது தாக்குதல் – அண்ணன், தம்பி கைது..!

கோவை சித்தாபுதூர். தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி .இவரது மகள் சவுமியா (வயது 19) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் சந்துரு (வயது 22 )மூர்த்தி ( வயது 20 )ஆகியோர் வீட்டினுள் புகுந்து சவுமியாவிடம் உன் அண்ணன் சஞ்சய் எங்கே? என்று கேட்டார்களாம் .அதற்கு அவர் தெரியாது என்று கூறினார் . இதனால் ஆத்திரம் அடைந்த சந்துரு அவரது தம்பி மூர்த்தி ஆகியோர் சேர்ந்து சவுமியாவின் தலை முடியை பிடித்து இழுத்து கிழே தள்ளினார்கள். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் சவுமியா புகார் செய்தார். போலீசார் சந்துரு அவர் தம்பி மூர்த்தி ஆகியோர கைது செய்தனர். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மானபங்கமுயற்சி, கொலை மிரட்டல் ஆகிய 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..