இருகூரில் அடுத்தடுத்த வீடுகளில் துணிகர திருட்டு : நர்ஸ், பால் வியாபாரி வீட்டில் நகை கொள்ளை..!

கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர் எல்.ஜி. நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் .இவரது மனைவி ஆஷா ராணி( வயது 34) ஹோம் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரதுகணவர் சுரேஷ்குமார் அரபு நாட்டில் வேலை செய்கிறார். இந்த நிலையில் ஆஷா ராணி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு சென்றார்..நேற்று மாலையில் திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 4பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் இதுகுறித்து ஆஷா ராணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதே போல இருகூர் எல்.ஜி. நகரை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 52) பால் வியாபாரி .நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார் .நேற்று மாலையில் திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை . இது குறித்து கதிர்வேல் சிங்காநல்லூர் போலீஸ் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்கள்.இருகூரில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.