கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடிய கல்லூரி மாணவர் திடீர் மரணம்..

கோவை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ் (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார் . நேற்று சக மாணவர்களுடன் கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் விடுதியில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். வழியில் அவர் இறந்தார்..கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியதால் வெயில் தாக்கம் தாங்க முடியாமல் இவர் பாத்ரூமில் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..