பெண்களை தர குறைவாக பேசியும், குறித்த நேரத்தில் இயக்காமல் இருந்த மகளிர் இலவச அரசு பேருந்தை சிறை பிடித்த பெண்கள் – செல்போன் வீடியோ வெளியாகி பரபரப்பு..!

தமிழகம் முழுவதும் அரசு பெண்களுக்கு இலவச பேருந்து இயக்க வருகின்றது. இந்நிலையில் சிவானந்த காலனி பேருந்து நிறுத்தத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும், பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது.

இந்நிலையில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தத்தில் சில பெண்கள் இலவச பேருந்துகள் நின்று கொண்டு இருந்தது. வெகு நேரமாக அதனை உரிய நேரத்தில் இயக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அந்தப் பேருந்துகளை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த செல்போன் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.