கோவை பெண் காவலரின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை அருகே உள்ள இருகூர் ,ஏ.ஜி புதூர்ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி .காலனி சேர்ந்தவர். சுப்பிரமணி. இவரது மகன் சதீஷ் (வயது 31) இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 28)இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை பெண்காவலராக பயிற்சி பெற்று வந்தார்.இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் சதீஷ் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.இதனால் 3 முறை தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தார்.இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி ராஜலட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.