கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்..

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள வ. உ .சி .வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற அப்துல்லா (வயது 42) இவர் 2011 -ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று சிறையில் வைத்து திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு இறந்தார் .இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.