குடிபோதையில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற கோவை வாலிபர் தவறி விழுந்து பலி..!

கோவை சுந்தராபுரம்பக்கம் உள்ள மாச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி, அவரது மகன் சிவசாமி ( வயது 36 )இவர் நேற்று குடிபோதையில் மாச்சம் பாளையம் ,மாரியம்மன் கோவில் வீதியில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார்.அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.