கோவை நர்ஸ் எங்கோ மாயம்..!

கோவை பீளமேடு புதூர், மறைமலை நகரை சேர்ந்தவர் சிவசாமி இவரது மகன் பிரியங்கா (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இவரது தந்தை சிவசாமி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.