கோவை பிரபல மருத்துவமனை செக்யூரிட்டி அறையில் வைக்கப்பட்ட தங்கம், பணம் திருட்டு – காவலாளிகள் கைவரிசை..!

கோவை பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான பிரபல மருத்துவமனை உள்ளது.இங்குள்ள செக்யூரிட்டி அறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்க்க செல்வர்கள் கொண்டு செல்லும் பைகள் வாங்கி வைக்கப்படும். இவ்வாறு வாங்கி வைக்கப்பட்ட பையில் இருந்த 206 கிராம் தங்கம், பணம் ரூ.41 ஆயிரத்து 166 ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் மரியமுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரனை நடத்தினார்.இதில் மருத்துவமனையில் தலைமை பாதுகாப்பு காவலாளியாக பணியாற்றி வரும் ஜனார்த்தனன், காவலாளிகள் நாகமாணிக்கம் ஐயப்பன் ராஜேந்திரன் ஆகியோர் இந்த நகை பணத்தை திருடியது தெரிய வந்தது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.