கோவை நகைக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை: கோவை எஸ்.பி ஆய்வு.

கோவை நகைக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை: கோவை எஸ்.பி ஆய்வு.

கோவை மாவட்டம் காரமடையில் கார் ஸ்டேண்டு அருகே மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான சோலையன் ஜீவல்லரி நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இவரது வீடு காரமடை மரியாபுரம் பகுதியில் உள்ளது. சொந்த வேலை காரணமாக கடை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த கடையை செந்தில்குமாரின் மனைவி சாந்தாமணி நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அக்கம் பக்கம் கடை வைத்து உள்ளவர்கள் செந்தில்குமாருக்கு நகைக் கடை திறந்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவன், மனைவி இருவரும் நகைக் கடைக்கு வந்து பார்த்த பொழுது இக்கடைக்கு வந்த கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்தும், ஷட்டரை கடப்பாரையால் நெம்பி கடை திறக்கப்பட்டு இருப்பதும், கடையில் வைக்கப்பட்டு இருந்த அரை கிலோ தங்கம் மற்றும் 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் (தட்டு, பூக்கூடை, குடம், குத்து விளக்கு) பொருட்கள் கொள்ளை அடிப்பட்டு இப்பதும் தெரியவந்து.

இச்சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணவன், மனைவி இருவரிடையேயும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காரமடை நகைக் கடை கொள்ளை வழக்கில் சம்பவ இடத்தில் கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கோவையில் இருந்து தடய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் துப்பு துலக்குவதற்காக கோவையில் இருந்து வீரா என்ற மோப்ப நாய் வர வழைக்கப்பட்டு அதுவும் காரமடை – மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று பின்னர் நின்று விட்டது.

மேலும் கொள்ளையர்கள் காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.