கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை எஸ் .எஸ். குளம் பக்கம் உள்ள குரும்ப பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரதுமகள் மவுனிகா (வயது 18) சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை சிவக்குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர்செல்வி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.