சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு தாயை தவிக்க விட்ட 4 மகள்கள்…போலீஸ் விசாரணையில் சுமுக முடிவு.. காவலர்கள்களை வணங்கி நன்றி சொன்ன மூதாட்டி-நெகிழ்ச்சி சம்பவம.!

கோவை ஆர் .எஸ். புரம் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். மூதாட்டி தனது சொத்துக்களை 4 மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். சொத்துக்களை பிரிப்பதற்கு முன் போட்டி போட்டு தாயை கவனித்த மகள்கள் சொத்துக்களை பிரித்த பிறகு அவரை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இந்த தகவல் ஆர். எஸ் .புரம் காவல் நிலையத்திற்கு எட்டியது. இதையடுத்து போலீசார் 4 மகள்களையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கினார்கள். இதையடுத்து இனிமேல் தாயாரை ஒழுங்காக கவனிப்பதாக காவல் நிலையத்தில் உறுதி கொடுத்துவிட்டு தாயை கூட்டிச் சென்றனர்.மூதாட்டி காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளையும் காவலர்களையும் வணங்கி நன்றி தெரிவித்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.