பால் குடிக்கும் போது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை பரிதாப பலி..

கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் ஆர் .கே. கே. நகரை சேர்ந்தவர்  தெய்வசிகாமணி, இவரது மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது .நேற்று இந்த குழந்தைக்கு தாய் பால் ஊட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது . இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..