கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை சரவணம்பட்டி கீரணத்தம் ரோட்டில் உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் நாராயணசாமி . இவரது மகன் தனுஸ்ரீ (வயது 21)இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம் .எஸ். சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .முன்னதாக இவரது வீட்டின் மேஜை டிராயரில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது இருசக்கர வாகனத்தை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள டூவிலர் பார்க்கிங்கில் நிறுத்தி உள்ளதாகவும், தனக்கு வீட்டுக்கு வர விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். இது குறித்து இவரது தந்தை நாராயணசாமி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..