கோவையில் 100 போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர் கைது.

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் நேற்று இரவு சொக்கம்புதூர் பள்ளிக்கூடம் அருகே உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கருப்புக்கடை .சலாபத் நகரை சேர்ந்த நவாஸ் ( வயது 29) உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த செரிப் ( வயது 30)என்பது தெரிய வந்தது .இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..