ஆள் இருந்த வீட்டில் 10 பவுன் நகை,பணம் கொள்ளை..!

கோவை ஆவாரம்பாளையம் அரசமரம் வீதியை சேர்ந்தவர் முரளி .இவரது மனைவி புனிதா வயது 38.இவரது வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் ரு9 ஆயிரம் பணம் ஆகியவற்றை திடீரென்று காணவில்லை.இதுகுறித்து புனிதா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில்கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டுக்கு உறவினர்கள் விருந்துக்கு வந்திருந்தனர். அவர்கள் தான் இந்த நகைகளை திருடியிருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.