கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை ரத்தினபுரி தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக், இவரது மகள் நஸ்ரின் பானு ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். சி .ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து ரத்தினபுரி போலீசில் தந்தை முகமது ரபிக் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.