80 நாட்டுக் கோழிகள் கழுத்து நெரித்து சாகடிப்பு- கோவை சாப்ட்வேர் இன்ஜினியர் பரபரப்பு புகார்..!

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 35) சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். பகுதி நேர தொழிலாக இவரது வீட்டில் 80 நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறார்.இன்று காலையில் 80 கோழிகளும் கழுத்து நெரிக்கப்பட்டும். தலையில் தாக்கப்பட்டும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கபட்டது.இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது .வெள்ளிங்கிரி வீட்டின் பக்கத்து சைட்டில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சுகுமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.80 கோழிகள் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.