கடையில் பதுக்கி வைத்த134 கிலோ குட்கா பறிமுதல் – 2 வியாபாரி கைது

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் திருநகர் காலனியில், மளிகை கடை நடத்தி வருபவர் ஜேசுராஜா (வயது 40 ) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி ஜேசு ராஜா (வயது 40) கைது செய்யப்பட்டார்.

இதே போல குனியமுத்தூர் இடையர்பாளையம், சர்ச் வீதியில் உள்ள ஒரு கடையில் நடந்த சோதனையில் குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது .2 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 134 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சமீரா என்பவரை தேடி வருகிறார்கள்..