கோவை கல்லூரி மாணவி எங்கோ மாயம்..!

கோவை ரத்தினபுரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுமணி, இவரது மகள் சாமிளா( வயது 18 ) கே. என். ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் .முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி தனது தோழிகளுடன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார் . அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தயார் வசந்தி ரத்தினபுரி போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..