மாணவிகள் முன் நிர்வாணமாக நின்ற முதியவர் போக்சோவில் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் ,ராமநகரை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 68) இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் .இவரது வீட்டின் முன் 14 வயது 9 வயது மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அருகில் அழைத்து விஜயகுமார் தனது லுங்கியை கழற்றிவிட்டு நிர்வாணமாக நின்றாராம் .இதை பார்த்த சிறுமிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர் .இது குறித்து பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் . இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினார். இது தொடர்பாக முதியவர் விஜயகுமார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..