எலக்ட்ரிக் டெட்டனேட்டர், வெடிப் பொருட்களுடன் 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சாக்கு முட்டையுடன் சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 2 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 250 கிராம் வெடி மருந்து , 3 கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கோவில்பாளையம் பக்கம் உள்ள தேவனாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்( வயது 38 ) நீலகிரி மாவட்டம் வெலிங்டன் காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 54) என்பது தெரிய வந்தது. இவர்களில் மணிகண்டன் கட்டிடத் தொழிலாளியாகவும், ஆறுமுகம் மேஸ்திரியாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..