கோவை மத்திய சிறை கைதி திடீர் மரணம்..

கோவை : ஈரோடு மாவட்டம் பெருந்துறை, வாய்க்கால் மேடு கே.கே. நகரை சேர்ந்தவர் கனகராஜ் ( வயது 50)) இவர் கடந்த 2010 ஆண்டில் பெருந்துறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது .அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று கனகராஜுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறைக் காவலர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் கனகராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஜெயிலர் சரவணகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.