கையும் களவுமாக சிக்கிய பைக் திருடர்கள்.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 42 ) பொள்ளாச்சி மார்கெட் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று இருந்தார் . அப்போது 2 ஆசாமிகள் இவரது பைக்கை திருட முயன்றனர் .இதை பார்த்த கண்ணன் அந்த 2 ஆசாமிகளையும் கையும் களவுமாக பிடித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் ஒப்படைத்தார். சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் அவர்களை கைது செய்தார். விசாரணையில் அவர்கள் ஆனைமலை தர்மராஜா காலனியை சேர்ந்த மாசாணி முத்து (வயது 29) தெற்கு வீதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 27 )என்பது தெரிய வந்தது. பைக் பறிமுதல் செய்யப்பட்டது.