பூஜை அறையில் தீப்பிடித்து கோவை தொழில் அதிபரின் மனைவி கருகி பலியான சோகம்….

கோவை சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் .தொழில் அதிபர் இவரது மனைவி உமா காசிநாதன் ( வயது 72) இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத இவரது சேலையில் விளக்கு தீப்பற்றி உடல் முழுவதும் கருகியது .சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் பாலச்சந்தர் சிங்காநல்லூர் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.