கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் திவ்யஸ்ரீ (வயது 21) பி.பி.ஏ. பட்டதாரி. இவர் டெய்லர் கடையும் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகிறார் .காந்தி பார்க் ரோடு சலிவன் வீதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 24) இவர் பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் திவ்யஸ்ரீயை காதலிக்குமாறு வற்புறுத்தினார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் திவ்யஸ்ரீ .ஆர் .எஸ் .புரம். டி.பி. ரோடு, மகாளியம்மன் கோவில் அருகே நடந்து செல்லும் போது வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம் .இது குறித்து திவ்யஸ்ரீ .ஆர். எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை நேற்று கைது செய்தனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் . கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 5 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply