சிங்காநல்லுர் ஒட்டலில் விபசாரம்… பெண் தரகர் கைது – அழகிகள் மீட்பு.!!

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வினோத்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதை நடத்தி வந்த தேனி மாவட்டம் சாமி குளம்பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 42) கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அழகிகள் மீட்கப்பட்டு ஒண்டிப்புதூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.