கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில்ஸ், விவேக் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தர்ஷன் (வயது 17) பிளஸ் டூ படித்துள்ளான். இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சேரன் நகர் சந்திப்பில் சென்ற போது திடீரென்று நிலைத்தடுமாறி பைக்குடன் கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது தந்தை ராஜ்குமார் துடியலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply