கோஷ்டி மோதலால் பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து – 3 பேர் கைது..!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம் பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மகன் சூர்யா ( வயது 17) இவர் ஒண்டிப்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி தனது நண்பர்களுடன் வரதராஜபுரம், மாநகராட்சி பள்ளிக்கூட ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3பேர் இவர்களை வழிமறித்து ஏன்? எங்கள் பகுதியில் சுற்றுகிறீர்கள் என்று கேட்டார்கள். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மாணவர் சூர்யாவை கத்தியால் குத்தினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார்.இது குறித்து சூர்யா சிங்கநல்லூர் போலீஸ் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் வழக்கு பதிவு செய்து உப்பிலி ப்பாளையம் காந்தி நகரை சேர்ந்த கவுதம் ( வயது 20) சி.எம்.சி .காலனி விக்கி என்ற விக்னேஷ்வரன் ( வயது 23) சுனில் குமார் ( வயது 19) ஆகியோரை கைது செய்தார்.இவர்கள் மீது 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .இந்த நிலையில் விக்னேஸ்வரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நீலி கோணாம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்த சூர்யா (வயது 17 )ராகவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.