கோவை வழிதடத்தில் இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!

கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக இரண்டு ஏ.சி
பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த சேலம் கோட்ட
ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும்
திருவனந்தபுரம்-மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (சி.எஸ் எம்.டி)
இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:16332), கூடுதலாக இரண்டு
3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் இன்று முதல் இணைத்து இயக்கப்படுகிறது.
இதேபோன்று மும்பை சி.எஸ்.எம்.டி-திருவனந்தபுரம் இடையிலான வாராந்திர
எக்ஸ்பிரஸ் ரயிலில் (16331), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி
பெட்டிகள் நாளை முதல் இணைத்து இயக்கப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி-புனே இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில்
(எண்:16382), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 22-ந்
தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.
புனே-கன்னியாகுமரி இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:16381),
கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 23-ந் தேதி முதல்
இணைத்து இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.