கோவை அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு கத்திக்குத்து..!

கோவை கரும்பு கடை சுண்ணாம்புக்களவாய் டி.டி.சி .காலனியை சேர்ந்தவர் அபு என்ற அபூபக்கர்( வயது 60) இவர் கோவை மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அபுபக்கரிடம் தகராறு செய்தனர் இதில் ஆத்திரமடைந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அபுபக்கரை குத்தினார்.இதில் அவரது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது .இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் திரண்டு வந்தனர்.அதை பார்த்ததும் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.படுகாயத்துடன் கிடந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோவை கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.