மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து டெய்லர் வீட்டில் நகை, பணம் கொள்ளை-மர்ம நபர் கைவரிசை..!

கோவை ராம் நகர், காட்டூர், காலப்பன் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60) டெய்லர் .இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மலம்புழா சென்றிருந்தார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் ரூ.32 ஆயிரம் 8 பவுன் நகைகள் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை மீட்டர் பாக்ஸ் மேல் வைத்திருந்தார். அந்த சாவியை எடுத்து யாரோ வீட்டைத் திறந்து இந்த கொள்ளையை நடத்தி உள்ளனர். இது குறித்து ராமச்சந்திரன் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.ராமச்சந்திரன் தனது வீட்டின் சாவியை வழக்கமாக மீட்டர் பாக்சில் வைப்பதை யாரோ பார்த்து இருந்து இந்த கொள்ளை நடத்தி உள்ளது தெரிய வந்தது.அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்..