ரஷ்யாவின் மிரட்டல்களுக்கு உக்ரைன் அரசு பணியாது என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சிறிய நகரங்களை தன்வசப்படுத்திய ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவ்-வை சுற்றிவளைத்து நிற்கிறது. நகரில் ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கீவ் ...

பிஜீங்:சீனாவில் விபத்து நிகழ்ந்த விமானத்தில் இருந்த 132 பேரும் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன், எச்என்ஏ. என அரசுக்கு சொந்தமான 4 விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் 123 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 132 ...

சென்னை: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்ற பாரதியாரின் கனவு இன்றைய காலகட்டத்தில் நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். செய்யும் பணியில் ஆண் பெண் என்ற பேதம் பார்க்காமல், எல்லா வேலைகளையும் பெண்கள் செய்யும் காலம் இது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் ...

சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம்  மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சீனா குவாங்ஸி மாகாணத்தில் இருந்து சென்ற போயிங் 737 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. குன்மிங்கில் ...

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை அந்த நாட்டு வீரர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமான முறையில் நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்று வரும் ...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து பின்லாந்து முதல் இடத்தில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. ஐ.நா ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 150 நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம், தனிப்பட்ட நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது. இதில் இந்த ஆண்டு மகிழ்ச்சியான நாடுகளில் முதல் இடத்தை ...

பெரிய ரஷ்ய போர்க் கப்பல்கள் அதன் தீவுகளுக்கு அருகாமையில் பயணிப்பதைக் கண்டதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ராணுவ வாகனங்களுடன் ரஷ்ய போர்க் கப்பல்கள் பயணிக்கும் படங்களை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய தற்காப்புப் படையின் கடல் ரோந்து பிரிவினர், செவ்வாயன்று ரஷ்ய கப்பல்களை முதன்முதலில் பார்த்துள்ளனர். பின் அதனை தொடர்ந்து ...

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் பின்புறம் டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. கடையுடன் சேர்ந்து டாஸ்மாக் பாரும் உள்ளது. அதே சாலையில் அதற்கு முன்னதாக விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென்று கோவிலுக்கு எதிரே புதியதாக டாஸ்மாக் பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ...

வாஷிங்டன் : சீனாவுக்கு அந்த நாட்டின் கரன்சியான ‘யுவான்’ வாயிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மேற்காசிய நாடான சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் டாலருக்கான முக்கியத்துவம் குறைந்தவிடும் என்பதால், அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.தற்போது உலகெங்கும் நடக்கும் வர்த்தகங்களில் பெரும்பாலும், அமெரிக்காவின் கரன்சியான டாலரின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சவுதி ...

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச ...