ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (வயது 28). அழகு கலை நிபுணர். இவருக்கும் கோவையை சேர்ந்த 40 வயது தனியார் நிறுவன ஊழியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உற்சாகமாக வலம் வந்தனர். இந்த தகவல் தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் ...

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும் என்றும் பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி வரை செல்லும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும் எனவும் இரவில் ...

ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. ...

கொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு வேரியண்டான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்புக்களை அதிகப்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் வேரியண்டின் BA. 2 துணை வேரியண்ட் உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இதுவரை சோதனை செய்யப்பட்டதில் 94 சதவீத பாதிப்புகள் ஒமிக்ரான் BA. 2 துணை வேரியண்ட் ஆகும். தொடக்கம் முதலே புதுப் புது கொரோனா வைரஸ் ...

தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரெளடி ராஜாவுக்கு மரண தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜா என்ற கட்ட ராஜா மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டு கும்பகோணம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இன்று ...

டெல்லி, அரியானா, கேரளா, மராட்டியம் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு இந்த 5 மாநிலங்களும் கடுமையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. ...

டெல்லி: ஐநா பொதுச்சபையில் ரஷ்யாவை எதிர்க்காமல் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்துவிட்டது. ஐநா பொது சபையில் நேற்று ரஷ்யாவிற்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐநா மனித உரிமை ஆணையத்தில் ரஷ்யா இடம்பெறலாமா வேண்டாமா என்பது தொடர்பாக இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. ரஷ்யாவின் நட்பு ...

தமிழ்நாட்டில் 5 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் 1.67 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் – 102கடத்தல் வாகனங்கள் பறிமுதல். 3,187 பேர் | கைது.டிஜிபி சைலேந்திரபாபு தகவல், கோவைஏப்2 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று காலை 11 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தின் பொறுப்பு முதல்வராக பிரகாஷ் என்பவரும், முதல்வராக சுகுமார் என்பவர் இருந்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் ...

கோவை : கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது : கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5,624 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 3,778 மனுக்கள் ...