கோவை சிங்காநல்லூர்- வெள்ளலூர் இடையே நொய்யல் ஆற்றின் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் இருந்த பாலம் பழுதடைந்திருந்த நிலையில் அருகிலேயே மற்றொரு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோவையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் நொய்யல் ...
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 20,139 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 13,615 நேற்று 16,906 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,139 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ...
கீவ்: உக்ரைனில் அதிநவீன ஏவுகணை தாக்குதல் மூலமாக ஒரே நாளில் 420 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் உக்கிரமான போர் 130 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காகவே வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகள் நாட்டில் பிற பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ...
மக்களவையிலும், மாநிலங்களிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, ...
மதுரை: மானாமதுரை அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக பானை வடிவிலான உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியாக மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான கூடுதல் சான்றுகளை தேடி 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட ...
அமெரிக்காவில் ஜூன் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக விரைவான அதிகரிப்பாக உள்ளது. இந்தியாவின் ஜூன் மாத பணவீக்க விகிதம் 7.1% ஆக உள்ளது. இது ஆர்.பி.ஐ.,யின் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவான 6 சதவீதத்தை விட அதிகம் தான் எனினும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ...
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை, 97 அடியை எட்டியதால் நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய ...
கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் சவுரி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துள்ளார். அதனை அடுத்து அரசு கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க, டி.சி தேவைப்படுகிறது. ...
கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் பெண்கள் மற்று முதியவர்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர். இதனால் சில நேரங்களில் சிக்னல்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தது. இதனை தடுக்க கோவை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் ...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,906 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,678 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,906 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,30,713 ...













