கோவையில் பக்ரீத் பிரியாணி சமைத்து கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்த சிலிண்டரால் பெண் உடல் கருகியது…

கோவை போத்தனூர் நூராபாத்,சர்தார் சாகிப் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா( வயது 45 )இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. 2மகள்கள் உள்ளனர்.நேற்று இவர் பக்ரீத் பண்டிகையை ஒட்டி வீட்டில் உள்ள சிலிண்டர் அடுப்பில் பிரியாணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சிலிண்டரில் இருந்து குபீர் என்று தீ பிடித்தது.இதில் அவரது முகம் உடல் முழுவதும் கருகியது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இதுகுறித்து போத்தனூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.