கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு முன் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க .சார்பில் வருகிற 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .சமூக விரோத செயல்களுக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜாதி, மதம். பாரா மல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் ...
கொழும்பு நகரில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு போராட்டங்களால் மீண்டும் போராட்டக் களமாக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்பாட்டம் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள ...
காவல்துறைக்கு NIA-வை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரம் இல்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த சுதந்திரத்தை தமிழக காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக கவர்னர் தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளார் கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘கோவையில் ...
சமீபத்தில், இலங்கை நாடு பொருளாதார நெடிக்கடில் சிக்கியதால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே, அதிபர் கோத்தபய, பிரதமர் ராஜபக்சே மாளிகைகளை தீயிட்டுக் கொளுத்தினர். அவர்கள் வெளி நாட்டிற்குச் தப்பிச் சென்ற நிலையில், சொந்த நாட்டிற்கு மீண்டும் திரும்பினர். இலங்கை நாட்டின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்ட போதிலும், கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து ...
கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் அதிகரித்த சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 874 மீட்டராக சரிந்துள்ளது. கோவை மாநகரில் 26 வார்டுகள் நகரையொட்டியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால், சிறுவாணி ...
கோட்டை மேடு வின்சென்ட் ரோடு மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த 93 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது. இதில் பள்ளி வளாகத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்து இடர்பாடுகளிடையே சிக்கியது. மேலும் அருகே இருந்த இரண்டு வீடுகளின் சுவர்களும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் இல்லை. ...
கோவை கோட்டை மேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து மாநகர போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கார் வெடிப்பை தொடர்ந்து கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ...
ராமநாதபுரம்: வரும் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். பசும்பொன்னில் உள்ள முத்திராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும். அதைப்போல இந்த ஆண்டும் 115-வது தேவர் ஜெயந்தியும் திருபூஜை விழா வருகிற 30-ம் ...
சிட்ரங் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வங்க தேசத்தில் 35 பேராக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியது, சிட்ரங் என பெயர் வைக்கப்பட்ட அந்த புயல் வங்கதேசத்தில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. நேற்று முன்தினம் வங்கதேசத்தின் பாரிசால் பகுதியில் கரையைக்கடந்த இந்த சிட்ரங் புயல் வங்கதேசத்தின் போலா மாவட்டத்தில் பெறும் சேதத்தை ...
திருச்சி: திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரின் டயர் வெடித்ததில், கார் வேகமாக எதிர் திசையில் ...













