சிட்ரங் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு .. 10,000க்கும் மேல் வீடுகள் சேதம்..!

சிட்ரங் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வங்க தேசத்தில் 35 பேராக அதிகரித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியது, சிட்ரங் என பெயர் வைக்கப்பட்ட அந்த புயல் வங்கதேசத்தில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. நேற்று முன்தினம் வங்கதேசத்தின் பாரிசால் பகுதியில் கரையைக்கடந்த இந்த சிட்ரங் புயல் வங்கதேசத்தின் போலா மாவட்டத்தில் பெறும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது.

அந்த பகுதியில் பெரும்பாலான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன, மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதத்தில் இடிந்துள்ளன. இரண்டாவது நாளாக வங்கதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுவரை இந்த சிட்ரங் புயலுக்கு 35 பேர் பலியாகியுள்ளனர், மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், இன்னும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.