கோவை குரும்பபாளையத்தில் வீட்டில் வளர்த்து வரும் கோழி இட்ட முட்டையின் நீளம் எடை ஆகியவை வழக்கத்திற்கு மாறாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் பகுதியில் அபு – ஷாமிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். எம்.இ பட்டதாரியான ஷாமிளா கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளார். கணவரின் உதவியுடன் தனது வீட்டிலேயே கூண்டுகள் அமைத்து ...

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ...

உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினாவுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவையை கொண்டு வர மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக சென்னையில் மெரினா முதல் பெசன்ட் நகர் இடையே கடற்கரையோரமாக ரோப் ...

சென்னை: தமிழகம் கலை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் இந்தியாவின் தலைநகரமாக விளங்குகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இந்தியாவின் அழகு என்பது வேற்றுமையில் ஒருமைப்பாடு காண்பதுதான், அதிலும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வேற்றுமை மிகவும் அழகானது. வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள வேண்டுமென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ...

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதல் அதிரடி ரெய்டில் களம் இறங்கியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் ஹைதராபாத் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ...

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கையால் அந்த நாட்டு ...

கோவை: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பிறந்தது முதல் 5 வயது வரை பல்வேறு வகையான தடுப்பூசி திட்டம் தமிழக சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று போலியோ தடுப்பூசி. இந்த தடுப்பூசி தற்போது குழந்தை பிறந்த 6 மற்றும் 13 -வது வாரங்களில் 2 தவணைகளாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் ...

கோவை சூலூர், பீடம்பள்ளி அருகே உள்ள காரைக்குட்டை பகுதியில் மாணிக்கம் என்பவரது தோட்டத்தில் இன்று காலையில் நிர்வாண நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவரை யாரோ அடித்து கொலை செய்து பிணத்தை வீசிவிட்டு சென்றிருப்பதாக சந்தேகிக்கபடுகிறது.இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ ...

கோவை : தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள நவலையை சேர்ந்தவர் அறிவழகன் ( வயது 35) இவர் சிங்காநல்லூர் பக்கம் உள்ள நீலி கோணாம்பாளையம், அண்ணா நகரில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார் .இவருக்கு சீட்டு விளையாடும் பழக்கம் உள்ளது ,இதனால் ஏராளமான பணத்தை இழந்தார். இந்த நிலையில் இவர் வாழ்க்கையில் ...

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், கிராமம் தோறும் சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தென்னை உற்பத்தியாளர்கள் சங்க விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட ...