வரி ஏய்ப்பு: தமிழ்நாட்டில் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு..!

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதல் அதிரடி ரெய்டில் களம் இறங்கியுள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் ஹைதராபாத் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவேதான் சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ரெய்டு குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.