சீட்டாட்டத்தில் பணம் இழந்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை : தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள நவலையை சேர்ந்தவர் அறிவழகன் ( வயது 35) இவர் சிங்காநல்லூர் பக்கம் உள்ள நீலி கோணாம்பாளையம், அண்ணா நகரில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார் .இவருக்கு சீட்டு விளையாடும் பழக்கம் உள்ளது ,இதனால் ஏராளமான பணத்தை இழந்தார். இந்த நிலையில் இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் தங்கி இருந்த வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை மது சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை எடுத்து வருகிறார்கள்.